பல பகுதிகளில் மின்தடை

நாடளாவிய ரீதியில் 220,000 பாவனையாளர்களுக்கு இன்றைய தினம் (09/11) மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் மின்தடை காரணமாக அதுதொடர்பிலான முறைப்பாடுகள் கிடைக்கபெற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறு மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை சரிசெய்வதற்கு மின்சார சபையினால் முடிந்தளவில் அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல பகுதிகளில் மின்தடை

Social Share

Leave a Reply