இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 2 படகுகளும், இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த மீனவர்கள், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லவுள்ளதுடன் அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதனையடுத்து, மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் அவர்களை ஒப்படைப்பதற்கு, கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த இந்திய மீனவர்களை, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.