அஸ்வெசும 2ம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரும் திகதி அறிவிப்பு..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் கோரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னர் முதற்கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.

முதற்கட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் , 14 இலட்சத்து 6 ஆயிரத்து 932 பயனாளர்களுக்கான பணம், அவர்களது வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயனாளர்களின் எண்ணிக்கையை 20 இலட்சமாக உயர்த்துவதுடன் பொருத்தமானவர்களை தெரிவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply