யாழ்.மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.
பாடசாலைகள், வைத்தியசாலைகள், பல்கலைக்கழகம், பல்கலைக்கழக விடுதிகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் மாத்திரம் யாழ் மாவட்டத்தில் 111 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.