இந்தியாவில் இந்த நாட்களில் பரவி வரும் Omicron JN1 கோவிட் வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவந்த தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வயதானவர்கள், பல்வேறு நோய்களால், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென்றும், அதே போல் மோசமான காற்றோட்டம் உள்ள நெரிசலான சூழலில் முகமூடிகளை மீண்டும் பயன்படுத்துவது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இன்னும் நடைமுறையில் உள்ளதால், அதிக ஆபத்துள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வது முக்கியம் என்றும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோயின் காரணமாக, இந்தியாவின் கொச்சியில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வகை கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.