கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வாகன விபத்து – இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு..!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.

கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம், கொள்கலன் ஊர்தியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகஸ்த்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் உயிரிழந்துள்ளனர்.

Social Share

Leave a Reply