நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கவலை..!

இலங்கையில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஜனநாயகத்தின் பெறுமதி ஆபத்தில் வீழ்ந்துவிடும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை வழங்குமாறும், சட்டங்களை வகுக்கும் போது மக்களின் குரலை முடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply