ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கயை ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்திற்கான புதிய தலைவராக ஏ.கே.டி.டி.டி அரந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், கலாநிதி கே.ஏ.எஸ். கீரகல, சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன, பேராசிரியர் கே.எம். லியனகே, கலாநிதி டி.எம்.ஐ.எஸ். தசநாயக்க ஆகியோர் உறுப்பினர்களாகவும் சதுர மொஹொட்டிகெதர திறைசேரி பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.