இந்திய பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் மறைவுக்கு இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வானது இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் தலைவர் இசையமைப்பாளர் ஸ்ருதி பிரபா மற்றும் செயலாளர் மாலன் தர்மேந்திரா தலைமையில் கொழும்பு சுதர்ஷி மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த இரங்கல் நிகழ்வில், தமிழ் மற்றும் சிங்கள இசைக் கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.