வெளிநாட்டவர்கள் பயணித்த கார் மீது பஸ் மோதி விபத்து..!

தம்புள்ளை – ஹபரணை வீதியில் மிரிஸ்கொனியாவ பிரதேசத்தில் இன்று(04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். 

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் ஒன்றும், தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த காரும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. 

குறித்த காரில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தம்பதியினரும், அவர்களது 12 வயது மகனும் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது காயமடைந்த வெளிநாட்டவர்கள் மூவர் உட்பட காரின் சாரதியும், பஸ்ஸில் பயணித்த பெண் பிக்கு ஒருவரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Social Share

Leave a Reply