சிசு சரிய சேவை மீண்டும் ஆரம்பம்

சகல சிசு சரிய பஸ்களும் திங்கட்கிழமை (22.11.2021) முதல் சேவையில் ஈடுபடுமென தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளிலும் தரம் 6 முதல் 9 வரையான தரங்கள் ஆரம்பிக்கப்படும் நிலையில் மாணவர்களின் வரவை முன்னிட்டு அவர்களது நலன்கருதி சிசு சரிய பஸ் சேவையினை மீள ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேவையேற்படின் கூடுதல் பஸ்களை பெறுவதற்கு பிராந்திய டிப்போ மேலாளர்களை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிசு சரிய சேவை மீண்டும் ஆரம்பம்

Social Share

Leave a Reply