சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவுவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிதித்துறை நிபுணர் மனோஹரி குணவர்தன வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கடன் தொகையில், 50 மில்லியன் அமெரிக்க டொலர், ஏற்றுமதி, சுற்றுலா, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள பின்னடைவை சந்தித்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதற்காக பெண்கள் தலைமையிலான சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கான உத்தரவாத மானியங்களை ஈடுகட்டுவதற்கு 5 இலட்சம் அமெரிக்க டொலர் விசேட வசதியையும் இந்த திட்டத்தின் ஊடாக வழங்கவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த திட்டம் செயல்பாட்டு மூலதனத்தை வழங்குவதுடன், தமது செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப தயார்படுத்தல்களை மேற்கொள்வதற்கும் உதவும்.