பாகிஸ்தானில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 2:57 மணிக்கு, 105 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், கைபர் பக்துன்க்வாவின் சில பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானில் கடந்த மாதமும் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், ஜனவரி மாதத்திலும் 4.3 மற்றும் 6.0 ரிக்டர் அளவிலான இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.