நடிகை தமித்தா மற்றும் அவரது கணவருக்கு விளக்கமறியல்

நடிகை தமித்தா அபேரத்னவும் அவரது கணவரும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர்கள் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டதையடுத்து , இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (04) கைது செய்யப்பட்டனர்.

கொரியாவில் வேலை பெற்றுத் தருவதாக கூறி சுமார் 30 இலட்சம் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply