ரணில் – பசில் முக்கிய சந்திப்பு இன்று

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுக்கும் இடையே இன்று(23) மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று மாலை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பசில் ராஜபக்சவுக்கும் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றும்
இணக்கப்பாடின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply