குஜராத்தின் பந்துவீச்சை விஞ்சிய ரிஷப் பாண்டின் அதிரடி ஆட்டம் 

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. 

டெல்லியில் இன்று(24.04) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

டெல்லி அணி சார்பில் அணித் தலைவர் ரிஷப் பாண்ட் 88 ஓட்டங்களையும், அக்சர் படேல் 66 ஓட்டங்களையும் மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 26 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

குஜராத் அணி சார்பில் பந்துவீச்சில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளையும் மற்றும் நூர் அகமட் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். 

225 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது. 

குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் 65 ஓட்டங்களையும்,டேவிட் மில்லர் 55 ஓட்டங்களையும், விருதிமன் சஹா 39 ஓட்டங்களையும் மற்றும் ரஹித் கான் 21 ஓட்டங்களையும் அதிகப்பட்சமாக பெற்றுக்கொண்டனர். 

டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன்படி, இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகளினால்  வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக டெல்லி அணித் தலைவர் ரிஷப் பாண்ட் தெரிவு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வெற்றியீட்டியதன் ஊடாக டெல்லி அணி ஐ.பி.எல் தொடரின் தரவரிசை பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6ம் இடத்திற்கு முன்னேறியுதுடன், குஜராத் அணி 8 புள்ளிகளுடன் 7ம் இடத்திலுள்ளது. 

இதேவேளை, ஐ.பி.எல் தொடரின் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

ஹைதராபாதில் நாளை(25.04) இரவு 7.30 மணிக்கு குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. 

Social Share

Leave a Reply