இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவை காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கப்பல் சேவை இன்று(19.05) ஞாயிற்றுக் கிழைம ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவை நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகளினாலும் காலநிலை மாற்றத்தினாலும் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் சேவையிகை இன்று ஆரம்பிக்க முடியவில்லையென கப்பல் சேவையை முன்னெடுக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை மூன்றாவது முறையாக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.