நெடுஞ்சாலை பயணிகளுக்கான புதிய நடைமுறை

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் பயணிகள் எதிர்காலத்தில் QR ஸ்கேன் முறையைப் பயன்படுத்தி கைப்பேசி செயலின் ஊடாக கட்டணங்களைச் செலுத்தி கொள்ளும் வகையில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய LANKAQR என்ற செயலிக்குள் பிரவேசித்து QR முறையில் ஸ்கேன் செய்து கட்டணங்களைச் செலுத்தி கொள்ளலாம்.

நெடுஞ்சாலை வாயிலுக்கு அருகில் உள்ள LANKAQR செயலியை கைப்பேசியில் QR முறை மூலம் ஸ்கேன் செய்வதனால், 8 – 10 விநாடிகளுக்குள் இலகு முறையில் கட்டணங்களை செலுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

நெடுஞ்சாலை பயணிகளுக்கான புதிய நடைமுறை

Social Share

Leave a Reply