தேங்காய் வீழ்ந்து 11 மாத குழந்தை பலி..!

கண்டி, கலஹா, தெல்தோட்டை -நாரன்ஹின்ன பகுதியில் தேங்காயொன்று தலையில்
விழுந்ததில் 11 மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

குழந்தையை தந்தை அயல்வீட்டுக்குத் தூக்கிச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அதன்போது வீட்டுக்கு அருகிலிருந்த தென்னை மரத்திலிருந்து தேங்காயொன்று
தந்தையின் கையிலிருந்த குழந்தையின் தலையில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தை முச்சக்கர வண்டியில் தெல்தோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு
அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply