திடீர் அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(26.06) பிற்பகல் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மக்களுக்கு இன்று(26.06) ஆற்றவுள்ள விசேட உரை தொடர்பில் அமைச்சரவைக்கு இதன்போது அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.