மைத்திரிக்கு பதிலாக களமிறங்கவுள்ள மகன் தஹாம் சிறிசேன

எதிர்க்காலத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து தனது மகன் தஹாம் சிறிசேன வேட்பாளராக போட்டியிடுவார் என பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எதிர்க்காலத்தில் ஜனாதிபதித் தேர்தலில் அல்லது பொதுத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை எனவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். 

இருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply