வர்த்தமானி வெளியீட்டின் பின்னரான தேர்தல்கள் ஆணைக் குழுவின் அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதில் எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்து, தேர்தல் நடைமுறைகளுக்கான சட்ட மற்றும் நடைமுறைத் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க உறுதிப்படுத்தினார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதையடுத்து தேர்தல் குறித்த சந்தேகங்கள் எழுந்தன.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைகுழு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply