கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான யுவதிக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதுருகிரிய பிரதேசத்தில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டதன் பின்னர் கடுவெல பதில் நீதவான் முன்னிலையில் இன்று (21.07) முன்னிலைப்படுத்தப்பட்டார்.
கொலை சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் யுவதி கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன் பின்னர் நீதிமன்றத்தால் 48 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.