இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இலங்கை அமைச்சர்

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நேற்று (30/11) இந்தியாவுக்கு உத்தியோக விஜயம் மேற்கொண்டார்.

இது 2 நாள் விஜயமாக அமைவதுடன் அங்குள்ள சிரேஷ்ட அரசியல் தலைவர்களையும் அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக அறியமுடிகிறது.

இது பஸில் ராஜபக்ஷ பதவியேற்று மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இந்திய பிரதமரை சந்திக்கவுள்ள இலங்கை அமைச்சர்

Social Share

Leave a Reply