மொட்டுக் கட்சி – சுதந்திரக் கட்சி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மொட்டுக் கட்சி - சுதந்திரக் கட்சி இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் நாமல் ராஜபக்‌ஷவை ஆதரிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கட்சியின் பிரச்சார செயலாளர் திசர ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

தேசிய அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதாக  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply