மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி. தொடவத்த மற்றும் ஆர்.ஏ. ரணராஜா ஆகிய நீதிபதிகள் மற்றும் முன்னாள் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் எம்.சி.எல்.பி. கொபல்லாவ ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 107 ஆவது சரத்தின்படி, இன்று (06.09) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Social Share

Leave a Reply