
சிறு குற்றங்களுக்காகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாளை(12.09) இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 34வது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.