நான்காயிரத்தைக் கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

நான்காயிரத்தைக் கடந்த தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 4,031 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல் ஒழுங்குமுறை ஆணைக்குழுவிற்கு மொத்தம் 203 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,916 முறைப்பாடுகளும், வன்முறைச் செயல்கள் தொடர்பான 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply