2 கோடி ரூபா சிகரெட்டுக்களுடன் சிக்கிய பயணி

2 கோடி ரூபா சிகரெட்டுக்களுடன் சிக்கிய பயணி

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட இரண்டு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இலத்திரனியல் சிகரெட்டுகளை நிரப்புவதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயன பொருட்கள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொருட்களை இலங்கைக்குக் கொண்டு வந்த பயணி ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து வருகைதந்த, கொழும்பு – 13 பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 120,400 சிகரெட்டுகள் அடங்கிய 602 பெட்டிகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

Social Share

Leave a Reply