துண்டுப்பிரசுரத்தை மறுத்த நபர், கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு  

துண்டுப்பிரசுரத்தை மறுத்த நபர், கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு  

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்த நபரொருவர் ஐக்கிய மக்கள் சக்தியின் நாவலப்பிடிய அமைப்பாளர் சசங்க சம்பத் சஞ்சீவவினால் தாக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் நடைபெற்ற கடிகாரம் பழுது பார்க்கும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

குறித்த கடைக்கு நேற்றைய தினம்(15.09) வருகைதந்த சசங்க சம்பத் சஞ்சீவ உள்ளிட்ட ஆதரவாளர்களினால் வழங்கப்பட்ட துண்டுப்பிரசுரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அங்கிருந்த நபர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  

இதன்போது குறித்த நபரை கட்சியின் ஆதரவாளர்கள் மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

தாக்குதலுக்கு இலக்காகியதாகக் கூறப்படும் நபர் நாவலப்பிடிய பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, வெளியேறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.  

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

Social Share

Leave a Reply