நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் எடுப்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் அவற்றை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்கள் தேர்தல் சட்டத்தை மீறிய செயலாக கருதப்படும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.