தொலைதூர பேருந்து சேவைகள் அதிகரிப்பு

தொலைதூர பேருந்து சேவைகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

தொலைதூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளை இன்றைய தினம் (20.09) அதிகளவில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்கவுள்ளதால் தனியார் பேருந்து சேவைகள் குறைக்கப்படலாம் எனத் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply