தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – காயமடைந்த நபர் பலி

தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் - காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்

தெஹிவளை, கடவத்தை வீதியில் அடையாளம் தெரியாதவர்களால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

45 வயதுடைய நபர் ஒருவர் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply