தபால் மூல வாக்களிப்புக்கான அச்சிடும் பணிகள் நிறைவு

தபால் மூல வாக்களிப்புக்கான அச்சிடும் பணிகள் நிறைவு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சகத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மொத்தம் 10 இலட்சம் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கா கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் ஒரு பகுதி நேற்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், மீதமுள்ளவை இன்று வழங்கப்பட உள்ளன.

நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வாக்குச் சீட்டுகள் மற்றும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் உட்பட நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான அனைத்து அச்சிடும் நடவடிக்கைகளும் நிறைவடையும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply