நீரில் மூழ்கி பலியான இளைஞன்

நீரில் மூழ்கி பலியான இளைஞன்

களுத்துறை வடக்கு குடுவஸ்கடுவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர்
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தின் கரையில் சடலம் இன்று (18.10) கண்டெடுக்கப்பட்டதாக
களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியவைச் சேர்ந்த 26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் நீராடச் சென்றதாகவும், திடீரென அலையில்
சிக்கி காணாமற் போன நிலையில் சடலாமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Social Share

Leave a Reply