
மன்னார் கடற்பரப்புக்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இன்று (20.02) அதிகாலை
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீன்பிடி படகொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள
தமிழ்நாடு இராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த நால்வரே கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களைக் கடற்றொழில் மீன்பிடி நீரியல் வளத் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்