உள்ளூராட்சி மன்றத் தேர்தல்‌ தொடர்பில் விசேட அறிவிப்பு

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை மறுதினம் (27.02) நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய ஜூன் 02 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத முதல் வாரத்திலோ உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply