மூதூரில் வாகன விபத்து – 33 பேர் காயம்

திருகோணமலை – மூதூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (01.03) இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடையிலிருந்து சேருவாவில பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கு யாத்திரைக்காக பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 33 பேரில் 18 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply