உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் தமது சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பேஸ்புக் பதிவொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இம்முறை தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
மேலும் குருநாகல் மாவட்டத்தில் குருநாகல் மாநகர சபைக்கு இ.தொ.கா 13 தொகுதிகளில் 24 வேட்பாளர்களை களமிறக்கின்றது.
வடமேல் மாகாணத்தில் முதல் முறையாக தனித்து சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக இம்முறை குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டேன்” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்றைய தினம் (17.03) உள்ளூராட்சி மன்ற தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் இ.தொ.கா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தி ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார்.