25 சாரதிகள் அதிரடி கைது

வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபட்ட 25 பேரூந்து சாரதிகளை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை பொலிஸாராலும், சம்பந்தப்பட்ட சுற்றிவளைப்புப் பிரிவினராலும் இந்த பேருந்துகள் சுற்றிவளைக்கப்பட்டதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நிலான் மிரந்த தெரிவித்துள்ளார்.

குறித்த பேருந்துகள் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

25 சாரதிகள் அதிரடி கைது

Social Share

Leave a Reply