எரிசக்தி அச்சங்களுக்கு மேலாக, புதிய அச்சுறுத்தலாக ஹீலியம் பற்றாக்குறை உருவாகி வருகிறது.
ஹீலியம் என்பது அரைவினையியல் சிப் (semiconductor) தயாரிப்பில் மிகவும் முக்கியமான மூலப்பொருளாகும்.
ஸ்மார்ட்போன்கள், மின்சார வாகனங்கள், கணினிகள் உள்ளிட்ட பல தொழில்நுட்ப சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப்புகள் தயாரிக்க ஹீலியம் அவசியமாக தேவைப்படுகிறது.
இந்த பற்றாக்குறை நீண்ட காலம் தொடர்ந்தால், உலகளாவிய மின்னணு உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று தொழில் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மேம்பட்ட சிப் உற்பத்தி மந்தமாகும் அபாயம் உள்ளது.
மேலும், சிப்புகளை நம்பி செயல்படும் மின்னணு நிறுவனங்கள் சிரமத்திற்கு உள்ளாகலாம் என்றும், பெரிய அளவிலான டேட்டா சென்டர் (Data Center) திட்டங்களையும் சில நிறுவனங்கள் குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.