பல இடங்களில் சூரியன் உச்சம் கொடுக்கும் சாத்தியம்!

இன்று (06.04) இலங்கையின் பேருவளை, குருளுபத்த, ரக்வான, கொடகவெல, உடவளவை மற்றும் தனமல்வில உள்ளிட்ட பல பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

சூரியன் வடதிசை நோக்கி நகர்வதன் ஒரு பகுதியாக, இது கிட்டத்தட்ட நண்பகல் 12:13 மணியளவில் உச்சம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 15 வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply