தம்புத்தேகமவில் மூதாட்டி கொலை – பேரன் கைது!

அனுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகம பிரதேசத்தில் உள்ள மல்வனேகம பகுதியில், 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமை (08.04) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தனிப்பட்ட தகராறை தொடர்ந்து அந்தப் பெண்ணின் பேரன் தாக்குதல் நடத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 23 வயதுடைய சந்தேகநபர், ஒரு கம்பியால் தாக்கியதில் அந்த மூதாட்டி பெண் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தற்போது பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply