தமிழக சட்டசபையில் தவெக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு தனது பெரும்பான்மையை உறுதிப்படுத்தியது.

சபையில் நடைபெற்ற விவாதத்திற்குப் பின்னர், வாக்கெடுப்பு “உறுப்பினர்களை எண்ணிக் கணிக்கும் முறை”ப்படி நடத்தப்படும் என சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, அவையில் இல்லாத உறுப்பினர்களை மீண்டும் அழைக்கும் வகையில் மூன்று முறை மணி ஒலிக்கப்பட்டது. பின்னர், அவை நுழைவு வாயில்கள் மூடப்பட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது:
ஆதரவு: 144 எம்.எல்.ஏ.க்கள்
எதிர்ப்பு: 22 எம்.எல்.ஏ.க்கள்
நடுநிலை: 5 எம்.எல்.ஏ.க்கள்
வாக்கெடுப்பு நடைமுறையின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையடுத்து, நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதன் மூலம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தொடர்கிறது.

Social Share

Leave a Reply