இறக்குமதி செய்யப்பட்டுள்ள மசகு எண்ணெய் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் மூடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்தார்.
அண்மையில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த 7 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், மசகு எண்ணெய் தாங்கிய கப்பலின் தாமதம் காரணமாக எதிர்வரும் ஜனவரி முதலாவது வாரம் தொடக்கம் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.