திருக்கோவில் துப்பாக்கி சூடு – சந்தேக நபருக்கு விளக்கமறியல்

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் 4 பொலிஸ் அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் எத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (24/12) பொலிஸ் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது அங்கு வருகை தந்த பிரதான சந்தேக நபரினால், கடமை உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை பறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த உத்தியோகத்தர்கள் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

திருக்கோவில் துப்பாக்கி சூடு - சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Social Share

Leave a Reply