பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?

சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் அஷோக பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வருகை தரவுள்ளதாக தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக கடந்த 31ஆம் திகதி முதல் பால்மா விலையினை அதிகரிப்பதற்கு அதன் இறக்குமதியாளர்கள் தீர்மானித்திருந்தன.

இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவாலும் 400 கிராம் பால்மா பொதியின் விலை 60 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டன.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் பால்மா பொதி 1,345 ரூபாவிற்கும் 400 கிராம் பால்மா பொதி 540 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

பால்மாவுக்கு மீண்டும் தட்டுப்பாடு?

Social Share

Leave a Reply