பிரபா கணேசனுக்கு கொரோனா

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,முன்நாள் பிரதி அமைச்சருமான பிரபா கணேசனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் கடந்த 10 நாட்களாக தொடர்பிலிருந்தவர்களை அவதானமாக இருக்குமாறும், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறி இருந்தமையினால், பரிசோதனை செய்து கொண்டதாகவும், அதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுயதனிமைப்படுத்தலில் தான் இருப்பதாகவும் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

பிரபா கணேசனுக்கு கொரோனா

Social Share

Leave a Reply