பிரியந்த குமாரவின் முதல் சம்பளம் வழங்கப்பட்டது

கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சியால்கோட்டில் வன்முறை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவின் 10 வருடங்களுக்கான சம்பளம் அவரது மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் சம்பளமான 1,667 அமெரிக்க டொலர்களை இலங்கையிலுள்ள பிரியந்த குமாரவின் வங்கி கணக்கிற்கு பாகிஸ்தான் நிறுவனம் வைப்பிலிட்டுள்ளது.

அந்தவகையில், முதல் சம்பளத்துடன் 100,000 அமெரிக்க டொலர்கள் நிதியும் அவரது வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் அரசியல் தொடர்பு சிறப்பு உதவியாளர் தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் முதல் சம்பளம் வழங்கப்பட்டது

Social Share

Leave a Reply