பிள்ளையான் என அழைக்கப்படும் பாரளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் மூலமாக அவர் மலேசியா சென்றுள்ளார் என தகவல்கள் முதலில் வெளியாகியிருந்தாலும் அவர் படகு மூலமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பா செல்லும் நோக்கத்துடன் அவர் இவ்வாறு நாட்டை விட்டு சென்றிக்கலாமென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்ததனை தொடர்ந்து அவர் தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டபோது கிராமிய வீதிகளுக்கான இராஜாங்க அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிள்ளையான் சிறை வைக்கப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததனை தொடர்ந்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
